சென்னை: எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ல் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட எரிபொருளின் விலை உயர்ந்த நிலையிலும், கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை. மின்னணு மீட்டரில் தானாக கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.