சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணி (35), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த வாரம் மெரினா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2.12.2019ல் என்னுடன் பணியாற்றும் ஆண் நண்பருடன் மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த ஒருவர், தான் போலீஸ் என்று கூறி எங்களை செல்போனில் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படத்தை உனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார். புகைப்படத்தை அனுப்ப கூடாது என்றால், எனக்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்று கேட்டார். போலீஸ் என கூறி அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு வந்தார். நானும் கணவருக்கு தெரியாமல் சிறுக சிறுக பணம் கொடுத்தேன். இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரம் கொடுத்துள்ேளன். மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். எனவே மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றுவதாக கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ராணி கொடுத்த புகாரின்படி, மெரினா போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராணி கூறியபடி, சதீஷ்குமார் என்பவர் யாரும் மெரினா காவல் நிலையத்தில் வேலை செய்யவில்லை.