திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அறிவிப்பு பதாகை கடும் எதிர்ப்பால் அகற்றம்

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் இருந்த அறிவிப்பு பதாகை கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அகற்றப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட பதாகை அறிவிப்பு சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் இந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும், தமிழ் எழுத்திலும் சகயோக் என  அச்சிடப்பட்டிருந்தது. இதனால் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது.  

இது அப்பட்டமான இந்தி திணிப்பு எனக் கூறி புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுதாரித்த ரயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை கிழித்து அகற்றினர்.

Related Stories: