ரூ.5,000 லஞ்சம் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் எம்ஜிஆர் நகரில் உள்ள தனது வீட்டு மனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி கடந்த செப்டம்பரில் மின்வாரிய அலுவலகத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு போர்மேன் சங்கர் கணேஷ், பொறியாளர் சுப்பிரமணியன் ரூ.7 ஆயிரம் வாங்கி வர கூறியதாக தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை போர்மென் சங்கர்கணேஷிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சங்கர் கணேஷ், உதவி பொறியாளர் சுப்ரமணியம் ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் சஸ்பெண்ட் செய்து கோவை முதன்மை பொறியாளர் டேவிட் உத்தரவிட்டார்.

Related Stories: