ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவரும், எதிர்கட்சியை சேர்ந்த ஒருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) 2 எம்எல்ஏக்கள் பெனடிக்ட் மரக், எச்.எம்.ஷாங்ப்லியாங், எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பெர்லின் சங்மா ஆகியோர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்தனர். மேற்கண்ட 3 எம்எல்ஏக்களும் அடுத்த மாதம் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.