சென்னை; தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று காலை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.