மல்லசமுத்திரம் அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்த முயற்சி

மல்லசமுத்திரம்:  மல்லசமுத்திரம் அருகே, புளியமரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டி அக்ரகாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம்.கட்டிபாளையம் ஏரி அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சுமார் 200 ஆண்டு பழமையான புளியமரங்கள் இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன், இந்த மரங்களை மர்ம நபர்கள் திருட்டுத்தனமாக வெட்டி கடத்த முயன்றனர்.

அருகில் இருந்த தோட்டத்துக்காரர் அளித்த தகவலின் பேரில், கிராம மக்கள் சென்று பார்த்தபோது, 3 மரத்தை மர்ம நபர்கள் வெட்டியுள்ளது தெரியவந்தது. மேலும், 2 புளியமரங்களை முழுவதுமாக அறுத்து, அங்கேயே அடுக்கி வைத்துள்ளதும், ஒரு மரம் முழுமையாக அறுக்காமல் பாதியில் விட்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, புளியமரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: