தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சிவபிரசாத் பொறுப்பேற்று கொண்டார். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன், புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய கட்டுமான பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதையடுத்து ஆந்திர மாநிலம் கடப்பா விமான நிலையத்தில் இயக்குநராக பணியாற்றி வந்த சிவபிரசாத், பணியிட மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.