பனப்பாக்கம் அருகே இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்தது

நெமிலி: பனப்பாக்கம் அருகே இருசக்கர பேட்டரி வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பனப்பாக்கம் அடுத்த நெடுபுலியில் அமைந்துள்ள எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ரூ.1,20,000 மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக்கை வாங்கியுள்ளார். மேலும், வாகன பதிவு எண் வாங்குவதற்காக, தான் வாங்கிய நெடும்புலி ஷோரூமுக்கு தன்னுடைய பைக்கை ஓட்டிச் செய்றுள்ளார். பனப்பாக்கம் அருகே அவர் சென்றபோது திடீரென வாகனத்திலிருந்து புகை கிளம்பியது. அதைக்கண்டு சுதாரித்துக் கொண்ட பார்த்திபன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி உள்ளார்.

மேலும், புகை வந்த சில நொடிகளிலேயே வாகனம் தீப்பற்ற ஆரம்பித்து மளமளவென வேகமாக எரிந்தது. இதனால் பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திலேயே இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: