பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோயம்புத்தூர் இடையே 6 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்தது. சென்னை எழும்பூர் - சேலம் (22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) 1, 2-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1, 2, 3ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* எம்.ஜி.ஆர். சென்டிரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: