கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம், தில்லையம்பூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (82). இவரது மனைவி பாப்பா (எ) லட்சுமி (73). இவர்களுக்கு ராஜேந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் என்ற இரண்டு மகன்களும், கீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ராஜேந்திரன் (52) இளம் வயதிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். 2வது மகன் ரவிச்சந்திரன், மின்சாரத்துறையில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி மனைவி மேனகா மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் விபத்தில் உயிரிழந்தார். மகள் கீதாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரும் இறந்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்டுள்ள ராஜேந்திரனுக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.