சென்னை: சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை 4 வழி பாதையாக விரிவாக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடப்பது குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க புறவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக விரிவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 2ம் தேதி ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு அன்புமணி கடிதம் எழுதியிருந்தார்.