பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளுவர் மாவட்டம், சுப்பிரமணி பரதேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (38). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் திருவள்ளூரில் இருந்து ரயில் மூலம் ஜீவா ரயில் நிலையம் வந்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக்கை எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோன்று, கடந்த 25ம்தேதி தனது பைக்கை ஜீவா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு சென்றார். மறுநாள் வேலைக்கு செல்வதற்காக ரயில் மூலம் மீண்டும் ஜீவா ரயில் நிலையத்திற்கு வந்து தனது பைக்கை எடுக்க சென்றார். அப்போது, தனது பைக் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.