கேட்பாரற்று நிறுத்தப்பட்ட 41 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சாலையோரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 36 பைக்குகள், 5 லகுரக வாகனங்கள் என மொத்தம் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு பறிமுதல் செய்யப்பட்ட வாகன பதிவு எண்களை வைத்து 21 வாகன உரிமையாளர்களிடம் உப்படைக்கப்பட்டது. மேலும், உரிமை கோராத நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 144 வாகனங்கள் மீது 102 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மாநகரில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த 446 பைக்குகள், 5 ஆட்டோக்கள், 14 லகுரக வாகனங்கள் என மொத்தம் 465 வாகனங்கள் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: