பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் பலி

பெரம்பூர்: கன்னிகாபுரம், 6வது தெருவை சேர்ந்தவர் நல்லசாமி (50). ஆட்டோ டிரைவர். நல்லசாமிக்கு அவரது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார். நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வழக்கம்போல் குடித்துவிட்டு படுத்து தூங்கிய நல்லசாமி நேற்று காலை 7 மணிக்கு குளியல் அறைக்குள் சென்று பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நல்லசாமி நேற்று உயிரிழந்தார்.

Related Stories: