பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்க முயன்ற 193 பேர் கைது

சென்னை: நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படுபவர்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின்படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. அதன்படி, 14.11.2022 முதல் 20.11.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற  ரூ.53,71,209 மதிப்புள்ள 9447 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 25 லிட்டர், 41 எரிவாயு உருளை, கோதுமை 144 கிலோ ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: