நெமிலி: தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இன்று அதிகாலை முதல் நெமிலி, பனப்பாக்கம், பள்ளூர் சேந்தமங்கலம், தக்கோலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடும்பனி கொட்டியது.