சேலம்: சேலம் அருகே கோயிலுக்கு செல்வதாக கூறி அழைத்துச்சென்று, 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், மாப்பிள்ளை உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மேச்சேரி அருகேயுள்ள மன்னாதனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (27). பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தெரிந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்ய திட்ட மிட்டுள்ளார். இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை, ஆறுமுகம் சகோதரி ராதிகா (30), நண்பர் சதிஷ்குமார் (25) ஆகியோர் அந்த சிறுமியை கோயிலுக்கு செல்லலாம் வா என அழைத்துள்ளனர்.