கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது.