திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவில், 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்க நகரில் 112 பேருக்கும், கிரிவலப்பாதையில் 114 பேருக்கும் நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நியமன ஆணை இல்லாமல் அன்னதானம் வழங்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.