மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பாக செய்தியர்களை சந்தித்த அன்புமணி, நீர் மேலாண்மை திட்டத்திற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டால் தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாது என்றார். கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால், கடலில் வீணாக கலக்கும் காவிரி உபரி நீரில் 50 பி.எம்.சி.யை சேமிக்கலாம் என்றும் அவர் கூறினார்.