சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரே உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசன்ட் இன்ஸ்டடிடிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கல்லூரி வேந்தர் பி.எஸ்.ஏ.ஆரிப் புகாரி ரஹ்மான் தலைமை வகித்தார். இணை வேந்தர் அப்துல் காதர் ரஹ்மான் புகாரி, துணை வேந்தர் டாக்டர் ஏ.பீர்முகமது, பதிவாளர் டாக்டர் என்.ராஜாஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு 578 பட்டதாரிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் 44 பிஎச்டி, 51 முதுகலை மற்றும் 1795 இளங்கலை உட்பட மொத்தம் 2340 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். தரவரிசையில் இடம்பெற்றதற்காக 51 மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.