சங்கரன்கோவில்: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் வேதனையில் ஒடிசாவை சேர்ந்த பெண் சங்கரன்கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் மாண்டல். இவரது மனைவி ஸ்ரீ தனாமாஞ்சி (22). அஜய் குமார் மாண்டல் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அஜய்குமார் மாண்டல், பெருமாள் பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.