ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அரசு பங்களாவை 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக விரைவில் சட்டப்பேரவை தேர்தல்நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்ய அம்மாநில நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது. அனந்தனக் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு மிகுந்த குப்கர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வசித்து வருகிறார்.