புதுடெல்லி:‘ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. இதை உலகின் நலனுக்காக நாம் பயன்படுத்த வேண்டும்’ என்று பிரதமர் மோடி பேசினார்.
ஒவ்வொரு மாதத்தி ன் கடைசி ஞாயிறு அன்று, அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது. இந்தியா ஜி-20 தலைமைத்துவம் பெற்றதனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள், அவர்கள் அடைந்த பெருமையை பற்றி எனக்கு கடிதம் எழுதுகின்றனர்.