திருச்சி: சிங்கப்பூர் செல்ல பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி கோரிமேடு, கருமண்டபம், கே.கே.நகரில் உள்ள நேரு தெரு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த புகாரின்பேரில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் கடந்த 2 மாதம காலமாக பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.