அதிவேகமாக சென்ற கார் மோதியதில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 18 பேர் காயம்

பாட்னா: பீகாரில் சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது கார் மோதிய விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர். பீகார் மாநிலம் சரண் நகரில் சாலையோரமாக நடந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென கடையின் மீது மோதியது. பின்னர் அங்கு கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி நின்றது.

விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 18 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திலேயே கார் நின்றதால், அந்த காரை அப்பகுதியின் அடித்து ெநாறுக்கினர். அதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. டிரைவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: