சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆயுதப்படை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 1372 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இரண்டாம் நிலை காவலர் பதவியில் ஆயிரத்து 526 ஆண்கள், 654 பெண்கள் என 2 ஆயிரத்து180 பேர், சிறப்பு காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என மொத்தம் 3 ஆயிரத்து 552 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.