சண்டிகர்: பாகிஸ்தான் பகுதியில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரசில் சர்வதேச எல்லைக்குள் நுழைந்த டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில், எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டோகே கிராமம் அருகே இந்திய பிராந்தியற்குள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று நுழைந்தது. இதனை பார்த்து உஷாரான வீரர்கள் டிரோனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டிரோன் கீழே விழுந்தது.