கும்பகோணம்: ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பது ஜனநாயக விரோதம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி: அரசியல் சட்டம், அரசியல் சட்டத்தை உருவாக்கும் அமைப்புகளை சீர்குலைக்கும் அல்லது எதிர்த்து செயல்படுகின்ற போக்கை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது என்பது, உச்சநீதிமன்றம், தேர்தல் அதிகாரி குறித்து கேள்வி எழுப்பி இருப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை.