சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, கடந்த 2018 முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு, கொரோனா பரவலால் இணையவழியில் பயிற்சி நடத்தப்பட்டது. நடப்பாண்டு நோய் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் நேரடி முறையில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கி உள்ளது.