அரசியலமைப்பு சட்டத்தை உயர்த்தி பிடித்து நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல உறுதியேற்போம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை உயர்த்தி பிடித்து நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: