துரைப்பாக்கம்: பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனை சார்பில், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பற்றிய கருத்தரங்கு மாநாடு நடந்தது. சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் ஒபிசிகான் ரிவர்சிங் டயாபெசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பற்றிய கருத்தரங்கு மாநாடு நேற்று நடந்தது. ஜெம் மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய இஎன்டி சங்க முன்னாள் தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் கே.கே.ராமலிங்கம் கலந்துகொண்டு கருத்தரங்கு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், மருத்துவர் பிரவீன்ராஜ் பேசுகையில், ‘பருமன் மற்றும் சர்க்கரை நோயானது குணப்படுத்தக் கூடிய ஒன்று.