ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கப்பல் ேமாதியதில் நாட்டுப்படகு கவிழ்ந்து தங்கச்சிமடம் மீனவர்கள் 4 பேர் கடலில் தத்தளித்தனர். சக மீனவர்கள் 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த கில்மான், சபரி, சுவிங்டன், அந்தோணி சிaலுவை ஆகிய 4 மீனவர்கள், சூசையப்பர்பட்டினம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை கப்பல், நாட்டுப்படகு மீது மோதியது.