சென்னை: சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, கடற்கரை மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.