பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. அதனால், அவர் அப்பகுதியில் உள்ள மந்திரவாதி ஒருவரை சந்தித்து தனது குறையை கூறினார். அந்த மந்திரவாதி, ‘குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும்’ என்று கூறினார். அவரது பேச்சை நம்பிய அந்தப் பெண், பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கொன்று அவனது ரத்தத்தை குடிக்க திட்டமிட்டார். அதற்காக அந்த சிறுவனை கடத்திக் கொன்றார்.