டெல்லி: நீதித்துறையை மக்கள் அணுகும் முறை மாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்; சட்டங்கள் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட விளிம்பு நிலை மக்களே காரணம் என்கிறார். மேலும் சட்டத்துறையில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.