செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி மதுரா பைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா(19). இவர் பாலிடெக்னிக் கல்லூரில் 3ம் ஆண்டு படிக்கிறார். இருவரும் ஐயங்குளம் கூட்ரோட்டில் இருந்து பஸ்சில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். அப்போது மாணவிக்கும், பிரசன்னாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரசன்னா அடிக்கடி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்வாராம்.