திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சேதமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவற்றை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் நகர் சாலை உள்ளது. இதன் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. சமீபத்திய மழையால் சேதமான சாலையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், சில நேரங்களில் தடுமாறி விழுந்து அடிபடுகின்றனர்.