டெல்லி: நமது அரசியல் சாசனமே நமது மிகப்பெரிய பலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். நமது அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கை. இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கு கொண்டு இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் மோடி தெரிவித்தார்.