பாஜகவின் கைப்பாவையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: ஆளுநர் ரவி அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பிரபாகரனின் 68வது பிறந்த நாளில் படத்திற்கு மரியாதை செலுத்தியபின் வைகோ செய்தியர்களுக்கு பேட்டியளித்தார். பாஜகவின் கைப்பாவையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வது அனைத்தும் அப்பட்டமான பொய் எனவும் வைகோ தெரிவித்தார்.

Related Stories: