திருவொற்றியூர்: மணலி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராஜன் (22). இவர், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை காதலித்து, கடந்த 8 மாதங்களுக்கு முன், பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜன் நேற்று முன்தினம் வீட்டின் சமயலறையில், மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.