மாடியில் இருந்து குதித்தவர் சாவு

பெரம்பூர்: அயனாவரம் திருவள்ளுவர் நகர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் 2வது மாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில நபர், கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தகவலறிந்து வந்த அயனாவரம் போலீசார், அந்த நபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த சோமன்மைத்தி (30) என்பதும், அயனாவரம் பகுதியில் அணுகூல் என்பவருடன் இருந்ததும் தெரிந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட சோமன்மைத்தி, அதற்கு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: