வங்கி ஊழியரிடம் செல்போன் பறிப்பு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சஞ்சனி (22). இவர், தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மாநகர பேருந்தில் வந்து இறங்கி, புதுவண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணன் தெரு வழியாக போனில் பேசிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து, சஞ்சனி கொடுத்த புகாரின் கபரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Related Stories: