×

பலாப்பழ தோசை

செய்முறை:

அரிசியை 1 - 2 மணி நேரம் கழுவி ஊறவைக்கவும். பலாச்சுளைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஊறிய பிறகு, தண்ணீரிலிருந்து அரிசியை வடிகட்டி, வெல்லம், தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். மாவைக் கிண்ணத்துக்கு மாற்றவும். இப்போது பலாப்பழத்தை மென்மையான கூழாக அரைத்து, அரிசிக் கலவையில் சேர்த்து, ஒன்றாகக் கலந்து இனிப்பு சரிபார்க்கவும். ஒரு தவாவைச் சூடாக்கி, சிறிது நெய் தடவி, மாவை ஊற்றிப் பரப்பவும். குறைந்த தீயில் இருபுறமும் சுட்டெடுக்கவும். தோசை மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, அதை உடையாமல் பார்த்து எடுக்கவும்.

Tags :
× RELATED வளரும் குழந்தைகளும்… அவர்களின் வளர்ச்சிகளும்!