×

பருப்பு பூரண கொழுக்கட்டை

செய்முறை:

கடலைப் பருப்பை நன்கு வேகவிட்டுக் கொண்டு ஆறியதும் தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை பாகு வைத்துக் கொண்டு, அதில் அரைத்த விழுதைப் போட்டு ஏலப்பொடி சேர்த்துக் கிளறி பூரணம் தயாரிக்க வேண்டும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விட்டு அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, அரிசி மாவைப் போட்டு கிளற வேண்டும். மாவு வெந்ததும், ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக்கி அதையே கிண்ணம்போல் செப்புகளாகச் செய்து அதில் பூரணம் வைத்து மூடி ஆவியில் வேகவிட வேண்டும். இதுவே பருப்பு பூரணக் கொழுக்கட்டை.

Tags :
× RELATED வளரும் குழந்தைகளும்… அவர்களின் வளர்ச்சிகளும்!