திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த நெடுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீ பற்றி எரிந்தது. இதனால், கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். கல்பாக்கம் அடுத்த நெடுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில், திடீரென நேற்று பிற்பகலில் தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கூவத்தூர் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் மின் விநியோகத்தை துண்டித்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர் எரிந்து போனதால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.