ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்துார் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட நரிகுறவர் குடும்பத்தினர் சாலையோரம் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக இடம் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக படப்பை அருகே செரப்பணஞ்சேரி கிராமத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 1 குடும்பத்திற்கு 2 சென்ட் இடம் என தலா 40 நரிகுறவர் குடுபத்திற்கு 1.20 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், நரிகுறவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அப்பகுதியில் உள்ள 4.50 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது வருவாய் துறைக்கு தெரியவந்தது.