கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தொடர் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பரவலாக ஒருசில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில், மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு தினமும் 25 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.