திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நேமம் ஊராட்சியில் 500 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.எஸ்.ஜெ.பிரேம்நாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஜயா ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வார்டு உறுப்பினர்கள் என்.உமாசங்கரி நாகராஜ், கே.தமிழழகன், வி.சிவகாமி வடிவேல், எம்.உதயகுமார், எஸ்.முருகன், டி.விஜயா தாமோதரன், எம்.நிரோஷா மகேஷ், சி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் எஸ்.ரீமாவதி அனைவரையும் வரவேற்றார்.